Saturday, 11 February 2017

                             

                                                        தமிழ் எழுத்து  வரலாறு

 



TAMIL QUOTE :





காயமே  (material/matter - universe ) இது பொய்யடா  (its a lie )
வெறும் காற்றடைத்த பையடா  (its just pack of empty space) - Ancient tamil Sages quote

Saturday, 28 January 2017

சித்த மருத்துவம் - !!!!



1.பித்த வெடிப்பு குணமாக:
அரச மரத்துப் பாலை வெடிப்புள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.

2. நெஞ்சுவலி நீங்க:
தினமும் இலந்தைப்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி உள்ளவர்கள் விரைவில் குணமடைவர்.

3. இதய படபடப்புத் தீர:
தினமும் ஒரு பேரிக்காய் உண்டு வந்தால் இதய படபடப்பு நீங்கும்.

4. வாய்ப்புண் குணமாக:
தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

5. மூலம் குணமாக:
கருவேலம் இலையை அரைத்து இரவில் ஆசனவாயில் கட்டி வந்தால் மூல நோய் குணமாகும்.

6. சொறி, சிரங்கு குணமாக:
அருகம்புல் தைலம் தேய்த்து தினமும் இருவேளை குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்.

7. தொப்பை குறைய:
சுரைக்காயைக் குறைந்தது வாரம் இருமுறையாவது சாப்பிட்டு வந்தால் தொப்பை விரைவில் குறையும்.

8. கண் பார்வை தெளிவு பெற:
பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.

9. கெட்டநீர் வெளியேற:
நம் உடலில் தேவை இல்லாத கெட்டநீர் சிறுநீர் வழியாக வெளியேற தினமும் பப்பாளிக்காயைச் சாப்பிட்டு வரலாம்.

10. மூளை பலம் பெற:
பீர்க்கங்காய் வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதைக் குடித்து வர மூளை பலம் பெறும்.

11. உடல்வலி தீர:
முடக்கத்தான் இலையுடன் கொஞ்சம் சீரகம் சேர்த்துக் கசாயம் செய்து குடித்து வந்தால் உடல்வலி தீரும்.

12. இடுப்பு வலி தீர:
வேள்ளைப்பூண்டுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குணமாகும்.

13. திக்குவாய் சரியாக:
வில்வமர இலையைத் தினமும் காலையில் உணவுக்கு முன் தின்று வந்தால் வாய் திக்குதல் சரியாகும்.

14. பித்தக்கோளாறு தீர:
அகத்திக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தக்கோளாறு தீரும்.

15. வாய்ப்புண் குணமாக:
அகத்தி இலையை நீரில் போட்டு அவித்தப் பின் அந்நீரைப் பருகினால் வாய்ப்புண் குணமாகும்.

================
1.வழுக்கைத் தலையில் முடி வளர :
வெங்காயத்தை செம்பருத்திப் பூவுடன் சேர்த்து அரைத்து, வழுக்கை மீது தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

2. வெட்டுக்காயம் ஆற:
வசம்புத் தூளைக் காயத்தின் மீது தூவினால் வெட்டுக்காயம் ஆறும்.

3. வயிற்றுப்புண் குணமாக:
தினமும் 1 குவளை திராட்சைப் பழச்சாறு அருந்தி வர வயிற்றுப்புண் குணமாகும்

4. மார்புச்சளி தீர:
ஏலக்கைப் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மார்புச்சளி தீரும்.

5. சிறுநீர் கோளாறு நீங்க:
முலாம்பழம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் குணமாகும்.

6. காதுவழி குணமாக:
ஊமத்தம் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காது வழி குணமாகும்.

7. உடல் சூடு குறைய:
தினமும் ஆட்டுப்பால் அருந்திவர உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்.

8. முகத்தில் உள்ள கட்டிகள் குணமாக:
முகத்தில் அடிக்கடி சந்தனம் குழைத்துப் பூசிய பின் அது காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் உள்ள கட்டிகள் குணமாகும்.

9. கண்குளிர்ச்சி பெற:
கருவேப்பிலைத் துவையல் உண்டு வர கண்கள் குளிர்ச்சி பெறும். தவிர வாழை இலையில் சோறு சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாகும்.

10. மஞ்சள் காமாலை தீர:
கீழாநெல்லி இலையை நன்கு அரைத்துப் பாலுடன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.

11. உணவு செரிக்க:
வெற்றிலையில் இரும்புச்சத்தும், ஜீரணச்சத்தும் உள்ளது. ஆதலால் உண்டபின் வெற்றிலை போடுவது நல்லது.

12. ரத்தம் சுத்தம் பெற, ரத்தம் விருத்தியாக:
தினமும் அருகம்புல் பானம் அருந்தி வந்தால் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு ரத்த விருத்தி உண்டாகும்.

 உள்வெளிப் புண்கள் ஆறும்.

------------------------
1. உடல் பலவீனம் நீங்க : பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெரும்.

2. ரத்தம் சுத்தம் பெற : தினமும் அருகம்புல் பானம் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த விருத்தியும் உண்டாகும்.

3. வயிற்றுபுண் குணமாக :மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்னும், வயிற்றுப்புண்னும் குணமாகும்.

4. மூல நோய் தீர : புங்க மரத்துப் பட்டையை வேகவைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் மூலம் குணமாகும்.

5. இதய நோய் தீர : மூன்று திராட்சைப் பழத்தை வெந்நீரில் ஊறவைத்து, சாறு எடுத்து சம அளவு துளசிச் சாற்றை இதோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்,படபடப்பும் குறையும்.

6. நரை முடி கருப்பாக: முளைக்கீரையை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை குறையும்.

7. உடல் வலிமை பெற: வேப்பம்பூவை கசாயம் வைத்துக் குடித்து வந்தால் உடல் வலிமை பெரும்.

8. பற்கள் கெட்டி பெற; மாவிலையில் பற்களைத் தேய்த்து வந்தால் பற்களின் ஈறுகள் கெட்டிப்படும்.

9. ரத்த அழுத்தம் குறைய: தினமும் மீன் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் குறையும்.

10. உதிரப்போக்கு நிற்க: குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, 1 தேக்கரண்டி சீரகம் சேர்ந்து அரைத்துப் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர ரத்தப் போக்கு நிற்கும்.

11. காசநோய் தீர: தினமும் உணவில் அன்னாசிப் பழம் சேர்ந்து சாப்பிட்டு வர காச நோய் தீரும்.

12. கண்பார்வை தெளிவடைய: இரண்டு முந்திரிப் பருப்பு, 1 தேக்கரண்டி கசகசாவை அரைத்துப் பாலில் கலக்கிக் காலை வெளியில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும், சருமமும் மினுமினுப்பாகும்.

13. வெட்டுக்காயம் குணமாக: கண்ணாடித்துண்டால் நம் உடலில் காயம் ஏற்ப்பட்டால், வாழைப்பழத்தை அந்தக் காயத்தின் மீது வைத்துக் கட்டினால் ரத்தப் போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.

-----------------
1. கண் எரிச்சல் தீர:
நந்தியா வட்டம் செடியில் பூத்த பூவைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால் கண் எரிச்சல் தீரும்.

2. ரத்தக்கொதிப்பு குணமாக:
நெருஞ்சியை நன்கு நீரில் கொதிக்கவிட்டு அந்தச்சாற்றை எடுத்து அருந்தி வந்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.

3.தொண்டைக் கட்டு நீங்க:
சுக்கை எடுத்து வாயில் இட்டு, மெல்ல உமிழ்நீரில் ஊறவைத்து அந்நீரைக்குடித்து வந்தால் தொண்டைக்கட்டு நீங்கும்.

4. சுளுக்கு வலி தீர:
புளிய இலையை நன்கு சுடுநீரில் இட்டு, அவித்து அதைச் சூட்டோடு சூட்டாக சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம் தந்தால் சுளுக்கு வலி குணமாகும்.

5.நரம்பு பலம் பெற:
சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வர நரம்புகள் பலப்படும்.

6. வயிற்றுப்புண் தீர:
வாழைப்பூவை வாரம் 1 நாள் கூட்டு செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.

7.வயிற்றுவலி குணமாக:
அகத்திக்கீரையை நன்கு வேக வைத்துத் தேன் கலந்து சாப்பிட வயிற்றுவலி தீரும்.

8. இடுப்புவலி தீர :
வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர இடுப்புவலி குணமாகும்.

9. உடல் பருமன் குறைய:
பொன்னாவரைக் கீரை விதையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

10. முடி நன்கு வளர:
காரட், எலுமிச்சைப் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்துவர முடி நான்கு வளரும்.

11.வாழைக்குறுத்தைப் பிரித்துச் சுட்ட தீப்புண் மீது கட்டினால் தீப்புண் கொப்பளங்கள் குணமாகும்...


என்றும் இறைப்பணியில்

சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவில்